புல்லறிவாண்மை [தாழ்ந்த அறிவையே உயர்ந்த அறிவாகக் கருதிக்கொண்டு ஒழுகும் இயல்பு.]
எய்தி யிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி
வைதான் ஒருவன் ஒருவனை; - வைய
வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான்
வியத்தக்கான் வாழும் எனின். ---------------325
விளக்க வெண்பா
புகழ்மிகு மன்றத்தின் உள்நுழைந்து; எள்ளி
இகழ்ந்தான் ஒருவன் ஒருவனை; கேட்பவன்
தாழ்ந்தமைதி காத்தால்; அதன்பின் இகழ்ந்தவன்
வாழ்ந்தால்; அதுவே வியப்பு
திருக்குறள்_க்கும், நாலடியார்_க்கும், குறுந்தொகை_க்கும் எளிய வெண்பா வடிவில் விளக்கம்
Saturday, October 18, 2014
அதிகாரம் 40.காம நுதலியல் : [காதல் நினைவுகள்]
கண்கயல் என்னும் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல்; - பின்சென்றும்
ஊக்கி எழுந்ததும் எறிகல்லா ஒண்புருவம்
கோட்டிய வில்வாக்கு அறிந்து. -----------395
விளக்க வெண்பா
கண்ணைக் கயல்மீனாய்க் கண்டுகொண்டு காதலியின்
பின்சென்ற(து) அச்சிறு மீன்கொத்தி – பின்சென்றும்
கொத்த முனைந்து பயந்தோடும் பெண்புருவம்
குத்தும்வில் என்று திகைத்து
Friday, October 17, 2014
கடவுள் வாழ்த்து
வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.
காலத்தின் கட்டின்றி முன்தோன்றும் வானவில்போல்;
கால்நிலத்தில் பாவாத வானவரை - வாழ்வளிக்கும்
மண்ணைத் தலைதொடத் தாழ்ந்துவணங்(கு) ’எம்உள்ளத்(து)
எண்ணம் நிறைவுசெய்’ என்று
Subscribe to:
Comments (Atom)
.jpg)

