Saturday, October 18, 2014

அதிகாரம் 40.காம நுதலியல் : [காதல் நினைவுகள்]



கண்கயல் என்னும் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல்; - பின்சென்றும்
ஊக்கி எழுந்ததும் எறிகல்லா ஒண்புருவம்
கோட்டிய வில்வாக்கு அறிந்து. -----------395


விளக்க வெண்பா
கண்ணைக் கயல்மீனாய்க் கண்டுகொண்டு காதலியின்
பின்சென்ற(து) அச்சிறு மீன்கொத்தி – பின்சென்றும்
கொத்த முனைந்து பயந்தோடும் பெண்புருவம்
குத்தும்வில் என்று திகைத்து

No comments:

Post a Comment