Saturday, October 18, 2014

அதிகாரம் 33.புல்லறிவாண்மை

புல்லறிவாண்மை [தாழ்ந்த அறிவையே உயர்ந்த அறிவாகக் கருதிக்கொண்டு ஒழுகும் இயல்பு.]

எய்தி யிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி
வைதான் ஒருவன் ஒருவனை; - வைய
வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான்
வியத்தக்கான் வாழும் எனின். ---------------325

விளக்க வெண்பா
புகழ்மிகு மன்றத்தின் உள்நுழைந்து; எள்ளி
இகழ்ந்தான் ஒருவன் ஒருவனை; கேட்பவன்
தாழ்ந்தமைதி காத்தால்; அதன்பின் இகழ்ந்தவன்
வாழ்ந்தால்; அதுவே வியப்பு

No comments:

Post a Comment