வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.
காலத்தின் கட்டின்றி முன்தோன்றும் வானவில்போல்;
கால்நிலத்தில் பாவாத வானவரை - வாழ்வளிக்கும்
மண்ணைத் தலைதொடத் தாழ்ந்துவணங்(கு) ’எம்உள்ளத்(து)
எண்ணம் நிறைவுசெய்’ என்று

No comments:
Post a Comment